
கோப்புப்படம்
துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,116 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏப்ரல் 24-க்கு பிறகு பதிவான புதிய உச்சமாகும்.
இதுகுறித்து துருக்கி அரசு வெளியிட்ட அறிக்கையில்,
“இன்று புதிதாக 3,116 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 4,11,055 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 92 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 11,419 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 3,423 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்” என தெரிவித்தனர்.
<!–
–>